ஏழு பேரை விபரீத முடிவெடுக்க தூண்டிய கும்பலுடன் தொடர்புடையவர்கள் கண்டு பிடிப்பு!

சொர்க்கத்திற்கு செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை தற்கொலைக்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் மூடநம்பிக்கை கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின்படி, இந்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் சாமானியர்களுக்கு மேலதிகமாக சில பிக்குகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் கூறி ருவன் பிரசன்ன என்ற நபர் சுமார் பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரைப் பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட முப்பது பேரை மதவாத கருத்துக்களில் இருந்து விடுவிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.