செல்லக் கதிர்காமத்தை சூழ்ந்த வெள்ளம்!

 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்ல கதிர்காமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக செல்ல கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டில் பெய்துவரும் தொடர்மழைகாரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.