யாழில் மீளுருவாக்கம் பெறும் சட்டத்தரணிகள்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீண்டும் மீளுருவாகியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாணத்திற்கான உப தலைவர் பா. தவபாலன் தலைமையில் நேற்று முன் தினம் சங்கத்தின் நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.

நிர்வாக தெரிவு
இதன் போது முன்னாள் நீதிபதி சரோஜினி இளங்கோவன் தலைவராக ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஏனைய நிர்வாக தெரிவுகள் நடைபெற்றுள்ளது.

ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கமானது உள்நாட்டு யுத்தம் காரணமாக 1987ஆம் ஆண்டிற்கு பின்னர் செயலிழந்து காணப்பட்ட நிலையில் 37 வருடங்களின் பின்னர் மீண்டும் மீள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.