முல்லைத்தீவில் தனித்திருந்த பெண் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காகச் அனுப்பப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது.

கணவன் வேலைக்குச் சென்ற நிலையில் தனித்திருந்த குறித்த பெண் மீதே மர்ம கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பெண் இறுதிப் போரில் காலொன்றை இழந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.