உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான விவசாய விஞ்ஞானப் பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்பதாகவே வெளியிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2 எதிர்வரும் (01.02.2024) ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.