முல்லைத்தீவில் கரையொதுங்கிய சடலம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது.

குறித்த சடலமானது இன்று (19.01.2024) கரையோதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரையிலேயே இந்த சடலம் கரை ஒதுங்கி உள்ளதாகவும் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பொலிஸ் நடவடிக்கை

மேலும் சடலத்துடன் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறுது.

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சடலத்தினை மீட்பதற்காக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நீதிபதியை அழைத்துச் சென்று மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.