யாழில் சர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்!

   14 ஆவது “யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை” இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி கங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தினர், இந்திய துனைத் தூதரக அதிகாரிகள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கண்காட்சி நாளையும் மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், கண்காட்சியை பார்வையிட பொது மக்களும் ஆர்வத்துடன் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.