சீன நிலச்சரிவில் சிக்குண்டு பலர் மாயம்!

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 47 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊ்டகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அனர்த்தம் இன்று (22.01.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளது.

பாரிய அனர்த்தம்
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், கடந்த ஜனவரி 2013 இல், Zhaotong நகரில் அமைந்துள்ள Zhenxiong இல் நிலச்சரிவில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை நிகழ்ந்த நிலச்சரிவில் இதுவே பாரிய நிலச்சரிவு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.