மற்றுமோர் புதிய நிவாரண கொடுப்பனவு!

16,146 அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் மாதாந்த நிவாரண கொடுப்பனவாக 2000 ரூபாய் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சமுர்தி பலன் பெற்றவர்கள் பட்டியல் ஊடாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் முதல் அனைத்து மாவட்ட செயலகங்கள் ஊடாகவும் இந்த நிவாரணம் வழங்கப்படும் என அவர் மேலும் அறிவித்துள்ளார்.