ஆயுதங்களால் தாக்கி பணம் கொள்ளை!

பமுனுகம தெலத்துர அலபம்மா பகுதியில் மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களின் பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துள்ளனர்.

இணையத்தில் வெளியான விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வந்த மூவரே தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் மறைந்திருந்த நால்வர் தாக்குதலை நடத்தி 132,000 ரூபா பணம், 5 கையடக்கத் தொலைபேசிகள், நெக்லஸ் மற்றும் வளையல் என்பவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.