சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முறைப்பாடு!

எப்பாவல, யகல்லேகம பிரதேசத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த நபருக்கு வாகன வகை குறிப்பிடாமல் மோட்டார் வாகனத் திணைக்களத்தினால் சாரதி அனுமதிப்பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் செலுத்த வேண்டிய வாகன வகை குறிப்பிடாமல், புள்ளிகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மோட்டார் வாகன திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.