கெஹலிய வெளிநாடு செல்ல தடை விதிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை (02) முன்னிலையாகுமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது