கொக்கட்டிச்சோலையில் 16அடி உயரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம்

 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியம் பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தின் பொறுப்பாளரும் இலங்கை நிருவாக குழு உறுப்பினருமான சகோதரர் வீ.கே.சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்த தேசிய ஒருங்கிணைப்பாளர்   சார்லி ஹொஹ் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் கலைக்கூடத்தின் நினைவுபடிகம் திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் இதனை தொடர்ந்து சிவலிங்க தோற்றத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இந்தியாவிலிருந்து வரலாற்று புகழ்பெற்ற 12 சிவ ஆலயங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜோதிர்லிங்கக் கலைக்கூடமும் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.