போதைப் பொருள் தட்டுப்பாட்டால் ஏற்ப்பட்டுள்ள புதிய சிக்கல்!

சமூகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது இது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாட்களில் 3,63,438 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.