பொலிசாரின் யுக்திய நடவடிக்கையில் 680 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கையில் 680 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 126 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 680 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 168 கிராம் ஹெராயின்,பனி 93 கிராம் 926 மி.கி, கஞ்சா 925 கிராம் 156 மி.கி, 1,044 கஞ்சா செடிகள், மாவா 356 கிராம், 596 மாத்திரைகள், மதன மோதக 32 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், 02 பேரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருவதுடன் ஒருவர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 126 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 18 சந்தேக நபர்கள், 105 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகள் 105 மற்றும் குற்றங்களுக்காக 03 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்