கொழும்பு வீதிக்கு பூட்டு!

   பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கொழும்பு – வெல்லவாய பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

வெல்லவாய வெஹெரயாய பிரதேசத்தில் நிலவும் காட்டு யானைகளின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி வெல்லவாய தனமல்வில பிரதான வீதி வெல்லவாய வெஹெரயாய பிரதேசத்தில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

ஆர்ப்பாட்டகாரர்களா வீதி முற்றாக மறிக்கப்பட்டதால் பல கிலோமீற்றர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தமக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.