கணவன் மனைவி தகராறில் பறி போன உயிர்

 வெலிமடை, டயரபாவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில் பெண்னின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெலிமடை, டயரபாவத்த பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 மனைவியை கத்தியால் குத்தி கொலை 

கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.