யாழில் மது போதையில் அட்டகாசம் செய்த பொலிசார் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் சென்று அட்டகாசம் செய்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.