ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்டுள்ள தகவல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்பாளராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற மத்திய சந்திப்பில் கலந்துகொண்ட போது ஹிருணிகா பிரேமச்சந்திர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு தெரிவித்தது,

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஒரு பயங்கரமான கடந்த காலம் உண்டு. ஹரிணிக்கு அப்படியில்லை. அவருக்கு நல்ல அரசியல் வாழ்க்கை இருக்கிறது.

ஹரிணி அமரசூரியவை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.