அமெரிக்காவின் இருந்து நுரையீரல் மனிதன் உயிர் பிரிந்தார்!

போலியோ நோயால் பாதிக்கப்பட்டு சொந்தமாக சுவாசிக்க முடியாமல், 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலோக உருளைக்குள் வாழ்ந்த அமெரிக்கர் போல் அலெக்சாண்டர், கடந்த திங்கட்கிழமை காலமானார்.

அலெக்சாண்டர் இறக்கும் போது அவருக்கு வயது 78.

அலெக்சாண்டர் 1952 இல் போலியோவால் பாதிக்கப்பட்டார். அவரால் சுவாசிக்க முடியாத நிலையில், மருத்துவர்கள் அவரை உலோக சிலிண்டர் அறையில் வைத்தனர்.

மருத்துவர்களுக்கு சவால்
அப்போதும் போல் நீண்ட காலம் வாழ மாட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். போல் பல தசாப்தங்களாக மருத்துவர்களுக்கு சவால் விட்டார்.

போலியோவை ஒழிப்பதற்கான தடுப்பூசி 1950களில் உருவாக்கப்பட்டது.

போல் அலெக்சாண்டர் ‘இரும்பு நுரையீரலில் மனிதன்’ என்றும் அழைக்கப்பட்டார். வாழ்நாள் முழுவதும் முகம் மட்டுமே தெரியும்படி வாழ்ந்த போல் அலெக்சாண்டர், சட்டம் படித்து பட்டம் பெற்றார்