வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் வீதிக்கு இறங்கிய மக்கள்!

 வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான  போராட்டமானது  ஊர்வலமாக நெடுங்கேணி காவல் நிலையத்தை நோக்கி  செல்வதாக  கூறப்படுகின்றது.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் இணைந்துக் கொண்டுள்ளனர். \