இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 32 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) இரவு நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்புக்களில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட 5 படகுகள் 

அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 கடற்றொழிலாளர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 07 கடற்றொழிலாளர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்றைய தினம் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.