விபச்சார விடுதி நடாத்தி வந்த தாய் மற்றும் மகள் கைது!

ஹந்தான பிரதேசத்தில் உள்ள பெரிய வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபசார விடுதியை சுற்றிவளைத்த நிலையில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகள் விபசார மையத்தின் மேலாளராகவும், தாய் காசாளராகவும் பணிபுரிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபச்சார விடுதி தொடர்பில் இரண்டு வாரங்களாக விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

5000 ரூபாவிற்கு ஒருவரை விபசாரத்திற்காக
இதன்போது 5000 ரூபாவிற்கு ஒருவரை விபசாரத்திற்காக கொள்வனவு செய்த போதே சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.