உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தேரர் மருத்துவமனையில் அனுமதி!


காலிமுகத்திடலில் உண்ணாவிரதமிருந்த திரிபேஹ ஸ்ரீதம்ம தேரர் சுகவீனமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டபாயவை பதவி விலகுமாறு கோரி கோ கோம் கோட்டா போராட்டம் காலி முகத்திடலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த போராட்டதில் கலந்துகொண்ட திரிபேஹ ஸ்ரீதம்ம தேரர் உண்விரத போராட்டத்தை மேற்கொண்டுஇருந்தமை குறிப்பிடத்தக்கது