எரிபொருள் நிலையத்தில் அருகில் மீட்கப்பட்ட இனம் தெரியாதவரின் சடலம்!

இரத்தினபுரி – லெல்லோபிட்டிய பிரதேசத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள சன்னஸ்கம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொடகாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இது குறித்தான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.