நடுத்தர வயது பெண்ணுடன் ஓட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்திருந்த போது மயங்கி விழுந்து முதியவர் உயிரிழந்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் உள்ள குர்லா பகுதியில் உள்ள ஹோட்டல். இங்கு நேற்று காலையில் 61 வயது முதியவர் 40 வயது நடுத்தர வயது பெண்ணுடன் சென்று அறை எடுத்து தங்கி இருக்கிறார். காலை 10 மணி அளவில் வரவேற்பரைக்கு போன் செய்து அழைப்பு விடுத்திருக்கிறார் அந்த பெண். படபடப்புடன் பேசி இருக்கிறார். தன்னுடன் வந்த முதியவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்து விட்டார் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே ஓட்டல் ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது முதியவர் பேச்சு மூச்சு இன்றி கிடந்திருக்கிறார். உடனே ஹோட்டல் நிர்வாகத்தினர் குர்லா போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
போலீசார் குர்லா பகுதியில் உள்ள அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று கீழே விழுந்து கிடந்த முதியவரை மீட்டு சயான் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிய வந்திருக்கிறது.
முதியவருடன் தங்கிய பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அந்த முதியவர் ஒர்லி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிய வந்திருக்கிறது .
தன்னுடன் உல்லாசம் அனுபவித்து வந்தபோது, மது குடிக்க முயன்றார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்து விட்டார் என்று சொல்லி இருக்கிறார். பெண்ணிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட போலீசார், மேற்கொண்டு முதியவரின் பிரேத பரிசோதனை வந்த பின்னர் தான் அவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரிய வரும். அவர் வேறு ஏதேனும் மாத்திரை சாப்பிட்டாரா ? அதனால் மயங்கி விழுந்து உயிரிழந்தாரா? இல்லை மது காரணமா? இல்லை வேறு ஏதேனும் உடல் பிரச்சினை காரணமா என்பதை எல்லாம் பிரேத பரிசோதனை அறிக்கை தான் முடிவு செய்யும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.