முப்பது வருடங்களின் பின் திருகோணமலை துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் செயல்!

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களின் பின்னர் முதல் ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி இந்த முதலாவது ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நுண்ணிய மணல் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.