பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

இலங்கை ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டிற்குள் நுழைந்து  17 லட்சம் ரூபாய் பொறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யபட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சரத் லுகொடவின் வீட்டிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது அத்துடன் திருடப்பட்ட தங்க நகைகள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்  தலங்கம, மிரிஹான மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய இடஙகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்.

குறித்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி, ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வீட்டார் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையிலேயே இடம்பெற்றுள்ளது