கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான முழு விபரம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 22 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 284,534ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 843 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256,676 ஆக அதிகரித்துள்ளது.