வவுனியாவில் மதுபோதையில் ஆவா குழு என அட்டகாசம் – ஊடகவியலாளர் மீதும் தாக்குதல்!

மதுபோதையில் காவாலிகள் அட்டகாசம்!! நால்வர் வைத்தியசாலையில்!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் சென்ற காவாலிகள் தாக்கியதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று மாலை குறித்த பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஐந்துபேர்கொண்ட இளைஞர்குழுவினர் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மீது சரமாரியாக ஆயுதங்களால் தாக்குதல் நடாத்திவிட்டுத்தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பெண்உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஈச்சங்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த நபர்களால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது