ஏ – 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஏ – 9 வீதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்!

ஏ – 9 வீதியின் கிளிநொச்சி, பளை, முல்லையடி பகுதியில் இன்று (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் யாழ் நோக்கிச் சென்றவேளை எதிரே வந்த கனரக வாகனம் ஒன்றில் மோதுண்ட அவர், பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.