களுத்துறை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் சிக்கினார்…!


நேற்றைய தினம் களுத்துறை வடக்கு பொலிஸாரினால் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வீரகெட்டிய பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் களுத்துறையில் வியாபார நிலையமொன்றிலிருந்து பழங்களை கொள்வனவு செய்யும்போது, ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பிடிபட்டுள்ளார்.

மேலும் அவரிடம் 19 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களும், ஸ்கேனர், பிரிண்டர் மற்றும் மடிக் கணினி ஆகியவை மேலதிக விசாரணையில் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.