மட்டக்குளி பகுதியில் நேற்று (11) மாலை நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரான பாலத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கந்தானையைச் சேர்ந்த 76 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை இன்று (12) நடைபெறவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.