புத்தளத்தில் புதிதாக திருமணமான இளம் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புத்தளம், முந்தல் – கெரியங்கலி பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மதுரங்குளி நல்லந்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த பரீத் முஹம்மட் பஸ்ரின் (வயது 25) என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிதாக திருமணமான இளைஞனும் அவரது மனைவியும் கடந்த 20ஆம் திகதி கொழும்பில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர்கள் உடனடியாக சிலபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மூன்று வாரங்களாக சிலபம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.