9 வயது சிறுமியை மிளகாய் மற்றும் மிளகு கலந்த தண்ணீரை ஊற்றி அடித்து கொடுமை செய்த சிறிய தாய்!

கடுவெல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுமியொருவர் தனது சிறியதாயால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிளகாய் மற்றும் மிளகு கலந்த தண்ணீரை ஊற்றி சிறுமியை தாக்கிய சிறிய தாயை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் சிறிய தாய் செய்த கொடூரமான சித்திரவதையை பொறுத்துக்கொள்ள முடியாத பிரதேசவாசிகள் கடுவெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியை தாக்கிய 29 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.