இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 6 இலங்கைத் தமிழர்கள் இன்று (17) காலை தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலையைச் சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன், கனுவியா, சசிகுமார், சனுஜன், அந்தோணி பெர்னாண்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் இன்று காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டில் இறங்கினர். 17)

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால், கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடி வழியாக இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்குள் நுழைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மண்டபம் கடலோர காவல்படையினர் ஹோவர்கிராப்ட் மூலம் இலங்கை தமிழர்களை முதல் மணல் திட்டில் இருந்து மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் விசாரணைக்கு பின் 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.