வவுனியாவில் இன்று பாடசாலை சென்ற மாணணவர்களுக்கு நடந்த சோகம் : 40 பேர் வைத்தியசாலையில்!

வவுனியா மாவட்ட பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை குளவி கொட்டுக்கு இலக்காகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையின் காலை தொழுகையின் போது காற்றின் வேகம் காரணமாக மரமொன்றில் காணப்பட்ட குளவி கூடு ஒன்று கலைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொட்டியது.

பாதிக்கப்பட்டவர்களில் 12 மாணவர்கள் பதவியா மாவட்ட வைத்தியசாலையிலும், 8 ஆசிரியர்கள் மற்றும் 12 மாணவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 3 மாணவர்கள் மதுகந்த மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.