பிக் பாஸில் கதறி கதறி அழுத ஜனனி! இது தான் காரணம் !

இலங்கை செய்தி வாசிப்பாளரான ஜனனி, இப்போது பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக உள்ளார். 2வது வாரத்தில் கேப்டன் போட்டியில் இடம்பெறும் அளவுக்கு சிறப்பாக விளையாடி வந்தார்.

இன்று ஜனனி கண்ணீரில் மூழ்கியுள்ளார். இந்த வார டாஸ்க்கில் அவர் வெற்றி பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள் கூட அவருக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

“என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் இங்கு தனியாக இருப்பது போல் உணர்கிறேன். சிலருக்கு என்னை பிடிக்கவில்லை. எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று ஜனனி கேமரா முன் கூறி அழுதார்.

எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ஜனனி திடீரென இப்படி அழ ஆரம்பித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.