கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தோல்வியின் எதிரொலி; பிரஸெல்ஸில் கலவரம்!

கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (27) பெல்ஜியத்தை 2:0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது.

இதைத் தொடர்ந்து, கோபமடைந்த பெல்ஜியம் ரசிகர்கள் பிரஸ்ஸல்ஸ் தெருக்களில் இறங்கி வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு கவிழ்ந்ததால் மக்கள் தெருக்களில் பட்டாசு வெடித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரசிகர்கள் ஆவேசமாக கூச்சலிட்டதாகவும், காரை கொளுத்தியதாகவும், நூற்றுக்கணக்கான பட்டாசுகளை வெடித்ததாகவும் கூறப்படுகிறது.