வவுனியாவில் புதையல் தேடிய இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர் இயந்திரத்துடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு:

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவரிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர் இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த இயந்திரம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் அதனை எடுத்துச் சென்ற 35 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.