வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஆட்டோவின் சாரதி வைத்தியசாலையில் அனுமதி !

வவுனியா முச்சக்கரவண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (04) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள்,

ஏ9 வீதியில் மாத்தளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, மூன்று முறுப்புப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில், அமர்ந்திருந்த மூன்று முறுப்பு பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் சண்முகதாசன் வயது 58. முச்சக்கரவண்டியில், பலத்த காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, சேதமடைந்த முச்சக்கரவண்டி மற்றும் கார் என்பன வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.