உலகின் மிக வயதான நபர் காலமானார்

உலகின் மிக வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே தனது 118வது வயதில் காலமானார்.

லூசில் ராண்டன் என்ற இயற்பெயர் கொண்ட கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, 1904ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவர் 1944ஆம் ஆண்டு, கத்தோலிக்க கிறிஸ்தவ அறக்கட்டளையில் சேர்ந்தபோது ஆண்ட்ரே என்ற பெயரைப் பெற்றார்.

இரண்டாம் உலகப் போரின்போது குழந்தைகளை பராமரித்து வந்த இவர், 28 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோரை பராமரிப்பதில் செலவிட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தனது 118வது பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், உலகின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கன்னியாஸ்திரி ஆண்ட்ரே தனது 118வது வயதில் காலமானார்.

கன்னியாஸ்திரி ஆண்ட்ரே காலமானதை அடுத்து, அமெரிக்காவில் பிறந்த ஸ்பானிஷ் சூப்பர் சென்டெனரியரான, 115 வயதாகும் மரியா பிரனியாஸ் மோரேரா உலகின் மிக வயதான நபராகியுள்ளார்.