துருக்கி இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த அதிசய குழந்தை! பெற்றோருக்கு நேர்ந்த சோகம் !

துருக்கியில் ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களின் இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்து உயிர் பிழைத்துள்ளது.

இதனால், இந்த பெண் குழந்தை அதிசய குழந்தை என்று அழைக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தின் போது குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டதால், குழந்தையை பெற்றெடுக்கும் போதே தாயும் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.

இந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், சிரியாவில் நடந்த கொடூரமான போர் காரணமாக அவர்கள் டெய்ர் எஸோரிலிருந்து அஃப்ரின் வரை இடம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது.

வடகிழக்கு சிரியாவின் அஃப்ரின் கிராமப்புறத்தில் உள்ள Gendares என்ற இருளிலும், மழையிலும், குளிரிலும் பிறந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.