வவுனியாவில் ஓவிய கலையில் அனைவரின் பாராட்டுக்களை பெற்ற இளைஞர் !

வடக்கின் வவுனியா மண்ணினை சேர்ந்த செல்வகுமரன் (செல்வன் ஆட்ஸ்) Selva Kumaran என்னும் ஓவியர் இன்று வடக்கில் தத்ரூப ஓவியங்களை வரைவதில் பிரசித்திப்பெற்று வருகின்றார்
.
வவுனியாவில் பல அரச திணைக்களங்கள், பாடசாலைகள், ஹோட்டல்கள்,ஆலயங்கள், தனியார் நிறுவனங்களில் இன்று இவரது ஓவியங்களை காணக்கூடியவாறு இருக்கின்றது.

இவ்வாறான நம்மவர்களை வெளிக்கொணர வேண்டும்.

வடக்கில் எவ்வளவோ ஹோட்டல்கள், ஆலயங்கள், திணைக்களங்கள் பிளாஸ்ரிக் பிறின்ற் பனர் அடிக்கிறார்கள். இது சூழலுக்கும் கெடுதி, நீடித்தும் நிலைக்காது.

ஆனால் இவர் போன்ற ஓவியர்கள் கைவண்ணத்தினால் வரையும் போது அவற்றுக்கு மாற்றீடாக அமைவதோடு, எம்மவர்களின் கலையினையும் வளர்தெடுக்கலாம்.

இவ் ஓவியரின் திறமையை பகிர்வோம்
ஓவியரின் தொடர்புகளிற்கு
செல்வன் ஆட்ஸ்
செல்வகுமரன் – 0779599450