நெல்லிற்க்கான உத்தரவாத விலையினை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

வவுனியா ஓமந்தை விவசாயிகள் நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்குமாறு கோரி நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் பேரணியாக ஏ9 வீதி ஊடாக வவுனியா மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றுள்ளது.

ஆர்பாட்டத்தின் போது விவசாயிகளின் பயிர் அழிவிற்கான நஷ்ட ஈட்டை வழங்குங்கள் நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்கி விவசாயிகள் வாழ்வதற்கு வழி விடுங்கள் போன்ற பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்

இவ் ஆர்ப்பாட்ட பேரணி மாவட்ட செயலகத்திற்கு அருகில் சென்றடைந்ததும் மாவட்ட செயலக வாயிலில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்ததுடன் தமது கோரிக்கையையும் முன் வைத்தனர்.

இதனை தாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் நெல்லின் உத்தரவாத விலையை  100 ரூபாய்க்கு குறையாத வர்த்தமானியை அரசு வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர பேரணியில் ஈடுபட்டுலவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்