ஆறு கோடி ரூபாவுக்கு வலம்புரிச் சங்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது!

ஹட்டனில்  ஆறு கோடி ரூபாவுக்கு வலம்புரிச் சங்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரகசிய தகவலின் படி  நுவரெலியா விசேட அதிரடிப் படையினர், நேற்றிரவு குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

சோதனையின் போது அரிசி கொள்கலன் ஒன்றினுள் வலம்புரிச் சங்கு மறைத்து வைக்கப்படிருந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் வலம்புரிச் சங்குடன் பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.