இலங்கையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய அண்ணாமலை

இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள இந்திய ஆளும் கட்சியான மோடி தலைமையிலான  பா.ஜ.கவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்று பல தரப்பட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜயவர்தனவுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கி வருவதாகவும் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை மேற்கொண்டு இரு நாட்டுக்கான உறவையும் பலப்படுத்துவோம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தமிழர் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ள அண்ணாமலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ர் ஸ்ரீதரனுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்