இலங்கையின் மோட்டார் பந்தய வீராங்கனை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

நேற்றைய தினம் ஹொரணையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையின் மூத்த மோட்டார் சைக்கிள் சாம்பியனான கௌசல்யா சமரசிங்க என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் பேருந்து மீது மோதியதில் படுகாயமடைந்த நிலையில் மருத்தவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் மிகவும் திறமையான மோட்டார் பந்தைய வீராங்கனை ஆவார் இலங்கையினை கௌரவப்படுத்தும் வகையில் பல வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தகது.