கொழும்பு பல்கலைகழக மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கொழும்பு ஓஷன் பல்கலைக்கழகத்தின்( Ocean University of Colombo) இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நேற்று பிற்பகல் சிலாபம் கடற்கரையில் நீராட சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

60 பேர் கொண்ட குழு ஒன்று  சுற்றுலா சென்ற போது குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயரிழந்த மாணவி ரம்புக்கனையை சேர்ந்த த 25 வயதுடைய மாணவியே ஆவர்