இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படலாம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்திய – அவுஸ்திரேலிய கண்டத் தட்டுகளின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில் பாரிய நிலநடுக்கங்களை எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புத்தள, வெல்லவாய, மொனராகலை போன்ற பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கங்களும் கண்ட தகடுகளின் நகர்வினால் ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து 1,000 மைல்களுக்கு அப்பால் ஏற்பட்டுள்ளதால், இத்தகைய அதிர்வுகளின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டதாக பேராசிரியர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், இந்தோ-ஆஸ்திரேலிய கண்டத் தட்டு ஏற்கனவே இரண்டாகப் பிளவுபடத் தொடங்கியிருப்பதாகவும், கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் இது நிகழும் விகிதம் அதிகரித்திருப்பதாகவும் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலை உலுக்கிய சமீபத்திய பாரிய பூகம்பங்கள் பூமியின் மேற்பரப்பிற்குள் ஒரு புதிய தட்டு எல்லையை உருவாக்குவதற்கான சமீபத்திய படியை சமிக்ஞை செய்ததாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.